என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மது பாட்டில்கள் பதுக்கல்"
- தி.மு.க. பிரமுகர் வீட்டில் பதுக்கிய 2500 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது
- இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொடைரோடு:
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ஜெ.மெட்டூரைச் சேர்ந்தவர் காசிமாயன் (வயது 45). தி.மு.க. பிரமுகரான இவர் தனது வீட்டில் பதுக்கி வைத்து மதுபானங்கள் விற்பனை செய்வதாக மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் தனிப்படை இன்ஸ்பெக்டர் ஷேக் தாவூது தலைமையிலான போலீசார் காசிமாயன் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் பெட்டி பெட்டியாக ரூ.2500 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.
மேலும் வீட்டின் பின்புறம் நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோவிலும் மது பாட்டில்கள் இருந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து மது விலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் கதிர்வேல் (23), காசிமாயன் மனைவி தீபா (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய காசிமாயனை தேடி வருகின்றனர்.
தி.மு.க. பிரமுகர் வீட்டில் மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்